கந்தன் கருணை
சத்தியவதிக்கு குழந்தை இல்லாத பெருங்குறை மனதை வாட்டியது . அந்த முருகபக்தை கந்தனிடம் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள் . கந்தன் என்னவோ இவள் முகத்திலேயே விழிக்க விரும்பாதவன் போல அமைதியாக இருந்தான் . ஒருநாள் சஷ்டி விரதம் . காலையிலேயே நீராடி , சஷ்டி கவசம் பாடிக் கொண்டிருந்தாள் சத்தியவதி . அவளது மாமியார் காமாட்சி பூஜையறைக்குள் வந்தாள் . மலட்டு நாயே ! நேற்றே உன்னிடம் என்ன சொன்னேன் ! குழந்தை இல்லா குறை போக்கும் வைத்தியர் ஒருவர் நம் ஊருக்கு வருகிறார் . அவரிடம் போய் வைத்தியம் பார் என்று சொன்னேன் . நீ இங்கே உட்கார்ந்து முருகா ... முருகா என அழுது கொண்டிருக்கிறாய் . பன்றியே ! அந்த முருகன் என்ன மயில் மீது பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டா வரப்போகிறான் . உடனே கிளம்புடி , என்றாள் மனம் புண்படும் வகையில் . இந்த வசைமாரியைக் கண்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தாள் சத்தியவதி . அவள் கணவன் வெளியூர் சென்றிருந்தான் . யாரிடம் சொல்லி அழ ! அத்தை , ஏன் இப்படி பேசுகிறீர்கள் ? நான் தினமும் அந்த முருகனை வணங்குகிறேன் . அவன் ஏனோ கண்ணை மூடிக...