மலையே கரைந்தது
இலங்கை வேந்தன் ராவணனுக்கு ஓர் ஆசை . தேவர்கள் எனக்கு அடங்கி பயந்து நடக்கிறார்கள் . பல அரக்கர்களை நான் வென்றிருக்கிறேன் . என்றாலும் அருகில் உள்ள தமிழகம் மட்டும் என் ஆளுகைக்குள் வராமல் உள்ளது . எனவே தமிழகத்தை வென்று அதை நம் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆசை . உடனே அவன் தன் புஷ்பக விமானத்தில் தன்னுடைய சகாக்களுடன் பொதிகை மலைக்கு வந்தான் . அங்கே அகத்திய முனிவரைச் சந்தித்தான் . ராவணனின் நோக்கம் அகத்தியருக்குப் புரிந்துவிட்டது . தவவலிமையால் ஒப்புயர்வற்ற சிவபெருமானிடமிருந்து ஒப்பற்ற தமிழ்மொழியைப் பெற்ற அகத்திய முனிவருக்கு வணக்கம் , என்றான் பணிவுடன் . சிவனைக்குறித்து பலவகையான தவங்கள் இயற்றி , அதன் பயனாய் மூன்று கோடி வருடம் ஆயுளைப்பெற்ற ராவணன் என் இருப்பிடத்திற்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன் . வா ! வா ! என்று வரவேற்றார் அகத்தியர் . ராவணன் தன் வருகையின் உள்நோக்கத்தை தானே வெளிப்படையாகச் சொல்லும்படி செய்தார் அகத்தியர் . ராவணா ! இலங்கையில் இருக்க வேண்டிய நீ தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதன் நோக்...